Tuesday, April 26, 2016

கன்னியாவில் இராவணனின் தாயின் கல்லறை


கன்னியாவில் இராவணனின்

 தாயின் கல்லறை 


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/103     26 April 2016


இலங்கையில் உள்ள திருகோணமலையின் அருகில் கன்னியா என்னுமிடம் உள்ளது. இவ்விடத்தில் தனது தாயின் ஈமக் கிரியைகளை நிறைவு செய்வதற்காக இராவணன் ஏழு வென்னீர் ஊற்றுக்களை உருவாக்கி கிரியைகளை நிறைவு செய்த பின் இவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான் எனக் கூறப்படுகிறது.





































கன்னியா வென்னீர் ஊற்றின் அருகில் உள்ள மலையில் காணப்படும் இராவணனின் தாய் கைகேசியின் கல்லறை.



இது 60 அடி சமாதி என அழைக்கப் படுகிறது. தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இராவணனின் தலைநகர் அருகிலுள்ள திரிகூட மலையில் (திருக்கோணமலை) அமைந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.


என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.







பாண்டிய மன்னனால் திருக்கோணமலையில் அமைக்கப்பட்ட கோட்டையும், இரட்டை மீன் சின்னமும், கல்வெட்டும்.



பாண்டிய மன்னனால்

திருக்கோணமலையில் 

அமைக்கப்பட்ட கோட்டையும், 

இரட்டை மீன் சின்னமும், கல்வெட்டும்


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/102       26 April 2016






திருகோணமலையில் உள்ள பாடல் பெற்ற திருத்தலமான
 திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு செல்லும் முகப்பில் ஒல்லாந்தர் காலத்து கோட்டை உள்ளது.
அது உண்மையாகவே ஒல்லாந்தர் அமைத்த கோட்டை அல்ல என்றும், அந்த கோட்டை பாண்டிய மன்னன் திருமலையை ஆட்சி செய்த காலத்தில் அமைக்கபெற்ற கோட்டைஎனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் . அந்தக் கோட்டையைத்தான் ஒல்லாந்தர் பின் பாண்டிய மன்னரிடம் இருந்து கைப்பற்றினர்.





























































இதற்கு சாட்சியாக கோட்டை வாயிலில் பாண்டிய மன்னனின் அரச சின்னமான இரட்டை மீன் சின்னமும் சில தமிழ் வார்த்தைகளும் அதில் காணப்பெற்றன.

இது தமிழர்கள் ஆதி தொட்டே திருமலையில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். ஆனால் இப்போது அந்த கோட்டையில் காணப்பெற்ற பாண்டிய மன்னனின் சின்னமும், தமிழ் எழுத்துக்ககளும், வண்ணப் பூச்சுக்கள் பூசி மறைக்கப்பட்டுள்ளன.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.



விஷ்ணு புத்திர வெடியரசன் கோட்டை- நெடுந்தீவு,


விஷ்ணு புத்திர வெடியரசன்

 கோட்டை-நெடுந்தீவு 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/101       26 April 2016 





இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் கரையோரப்பிரதேசங்களில் குறிப்பாக காரைநகர்,நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்றுறை போன்ற தீவுப் பகுதிகளில் யாழ்பாண அரசின் கீழ் சிற்றரசாக கரையோரக் காவலை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட அரசுகளுக்கு தலைமை தாங்கியவர்களே விஷ்ணு புத்திரர் வம்சத்தை சார்ந்தவர்கள்.

கரையோரப் பாதுகாப்பை இவர்கள் பொறுப்பேற்றிருந்தபடியால் யாழ்ப்பாண அரசின் பாதுகாப்பில் இவர்களின் பணி அளவற்றதாக இருந்தது. இதன் நிமித்தம் இவர்களால் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட கோட்டைகள் நெடுந்தீவு, காரைநகர், ஊர்காவற்றுரை மற்றும் சில தீவுப்பகுதிகளில் அமைந்திருந்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட பாதுகாப்பு கோட்டைகளில் ஒன்றே நெடுந்தீவு கோட்டையாகும்.

















இவ்விடங்களின் முக்கியத்துவத்தை போர்த்துக்கேயர் உணர்ந்தமையினாலேயே பிற்காலத்தில் இதனையண்டிய பகுதியில் கோட்டைகளைக் கட்டினர். இவ்வாறு மதியூகத்துடன் சிறப்புற கரையோரப்பகுதிகளை நிர்வகித்து வந்த விஷ்ணு புத்திர வம்சத்தின் கடைசி அரசனே வெடியரசன் எனப்படுகின்றான்.






















போர்த்துக்கேயருடனான சண்டைகளின் போது இவனது எதிர்ப்பு அபாரமாக இருந்தது. முதலில் பாரம்பரிய முறைகளை பின்பற்றி போரில் ஈடுபட்ட இவன் பின்னர் வெடிவைக்கும் முறைகளை கொண்டு போர்த்துக்கேயர்களின் கப்பல்களை தகர்த்ததால் வெடியரசன் என்று அழைக்கப்படலானான் என சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதுமுண்டு.

அதைவிட வெடியரசனைப்பற்றியும் அவனது கோட்டையை பற்றியும் போர்துகீசரின் குறிப்புகளிலும் கூறப்படுள்ளதாக அறியவருகிறது.


என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.