Friday, December 4, 2020

மட்டக்களப்பு புல்லுமலைக் காட்டில் பண்டைய வைரவர் கோயிலின் சுவடுகள்

 

மட்டக்களப்பு புல்லுமலைக் காட்டில்
பண்டைய வைரவர் கோயிலின்
சுவடுகள்

 

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                                  NKS/202      04   டிசம்பர்   2020

 குறிப்பு: 

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

 புல்லுமலைக் காட்டின் எல்லைப் பகுதியில் மிகத்தொன்மை வாய்ந்த ஆலயமொன்றின் சிதைவுகளைக் கண்டேன். இக்காட்டுக் கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வைரவர் கோயிலாக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

 இப்பகுதியில் இருந்த ஓர் முக்கிய இடத்திற்கு காவலாக இக்கோயில் கட்டப் பட்டிருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது. இங்கு பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட குளம், கால்வாய் அல்லது மாளிகை ஆகியவற்றிற்கு காவலாக இக்கோயில் அமைக்கப் பட்டிருக்கலாம்.

புதையல் பிரியர்கள் இங்கு தமது கைவரிசையை காட்டி உள்ளமை தெரிகிறது. வாயில் தூண்கள் உட்பட 9 பாரிய கற்தூண்கள் இங்கு சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. சில தூண்கள் நிறுத்தி வைக்கப்பட்டும், சில தூண்கள் பாதி அளவு மண்ணுள் புதையுண்டும் காணப்பட்டன.

 கருவறை இருந்த இடத்தில் பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. அதிலும் சில தூண்கள் இடிந்து விழுந்து கிடக்கின்றன.

இங்கு செல்வதற்கு என்னுடன் வந்த நண்பர் நிஷாந்தன், நண்பர் சச்சிதானந்தன், சோமன் ஐயா ஆகியோருக்கு எனது நன்றிகள்.

 என்.கே.எஸ்.திருச்செல்வம்                                              வரலாற்று ஆய்வாளர்                                           இலங்கை.


No comments:

Post a Comment