Sunday, November 29, 2020

உகந்தை மலையில் காணப்படும் அபூர்வமான கல் குடை

 
உகந்தை மலையில் காணப்படும்
அபூர்வமான கல் குடை



என்.கே.எஸ்.திருச்செல்வம்.
NKS/199 29 நவம்பர் 2020

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

அம்பாறை மாவட்டத்தின் தெற்கில் குமண பறவைகள் சரணாலய நுழைவாயிலின் அருகில் உகந்தை மலை அமைந்துள்ளது.
இங்கு மலையடிவாரத்தில் பிரதான முருகன் கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் வலது பக்கத்தில் பிள்ளையார் மலையும், அதன் வலது பக்கத்தில் வள்ளி மலையும் காணப்படுகின்றன.
வள்ளி மலையின் பின் பக்கம் அபூர்வமான அமைப்புடன் ஒரு தனிக்கல் காணப்படுகிறது. இதுவே கல்குடையாகும்.
இது சுமார் 10 அடி விட்டமும், 8 அடி உயரமும் கொண்டதாகும்.


பிரதான பாறையில் தூக்கி வைத்தாற்போல் காணப்படும் இப்பெரிய கல்லை அதன் அடிப்பகுதியில் சுமார் ஒரு அடி விட்டமுள்ள பகுதியே தாங்கி நிற்கிறது.
தமிழ்நாட்டில் மாமல்லபுத்தில் உள்ள "கிருஸ்ணனின் வெண்ணெய் உருண்டை" என்றழைக்கப்படும் கல்லை ஒத்ததாக இக்கல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கதிர்காமத்தின் கிழக்குப் பக்கம் அமைந்துள்ள சித்தர் மலையிலும் ஓர் கல்குடை காணப்படுகிறது. அது அளவில் பெரியதாகும்.
உகந்தைமலை முருகனைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் இக் கல்குடையும் ஒன்றாகும்.
என்.கே.எஸ்.திருச்செல்வம்.
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

No comments:

Post a Comment