Friday, April 24, 2020

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி 200 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஆங்கிலப் பாடல்

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி 200 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஆங்கிலப் பாடல்


என்.கே.எஸ்.திருச்செல்வம்             
 NKS/151      24  April 2020


திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியாவில் ஏழு வெந் நீர் ஊற்றுக்கள் உள்ளன. இவை உலகப் பிரசித்தி பெற்றவையாகும். இவ்வெந்நீர் ஊற்றுக்கள் பற்றிய பல விபரங்களை நாம் அறிந்துள் ளோம். நாம் அறிந்த வகையில் கடந்த காலங்களில் கன்னியா வெந் நீர் ஊற்றுக்களைப் பற்றி இருவர் மட்டுமே பாடல்கள் பாடியுள்ளனர்.  1940ல் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும், 1961ல் புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்களுமே பாடல்களைப் பாடியுள்ளனர்.

ஆனால் இவர்களுக்கு முன்பே, சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு டி.ஏ. அன்டர்சன் எனும் ஓர் ஐரோப்பிய வெள்ளையர் ஆங் கில மொழி யில் கன்னியா வெந்நீர் ஊற்றுக்களைப் பற்றிப் பாடல் பாடியுள் ள மை வியக்க வைக்கிறது. 1809 ஆம் ஆண்டு டி.ஏ.அன் டர்சன் எழுதிய இந்த ஆங்கிலப் பாடல் தான் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி எமக்குக் கிடைக்கும் மிகப்பழைய பாடல்என்பதுகுறிப்பிடத்தக்கது.  மொத்தமாக 14 வரிகளைக் கொண்ட இப்பாடல் 210 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டுள்ளது.

டி.ஏ.அன்டர்சன் எனும் அறிஞர் கன்னியா வெந்நீர் ஊற்றுகளு க்குச் சென்று, அங்குள்ள வெந்நீர்க் கிணறுகளில் உள்ள நீரின் மகி மையை அறிந்து, அதை ஆங்கிலத்தில் பாடலாக எழுதியுள்ளார். 1809 ஆம் ஆண்டு இவர் எழுதிய Poems Written Chiefly in India” எனும் நூலில் இப் பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்நூலில் உள்ள 26 பாடல்களில் 15 ஆவது பாடல் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றிய பாடலாகும். ரம்மியமான நீரூற்று கள்எனப் பெயரிடப்பட்ட இப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் தலைப்பில் செய்யுள் 15-திருகோண மலையின் அரு கில் உள்ள வெந்நீர்க் கிணறுகள் அல்லது கன்னியாவில் எழுதப் பட்டது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

SONNET XV.
WRITTEN AT THE HOTWELLS or CANNIA NEAR
TRINCOMALEE

Salubrious  streams ! that have for ages pour’d
Thro’ these wild scenes, these solitary dells;
What tho’ your fame no pompous annal tells,
The untaught Indian has your power ador’d!
Majestic trees, and glens for ever green,
Forests of pathless shade, and mountains blue
Embosem you, and form a nobler scene,
Than ever fancy form‘d, or poet drew!
Fainting with heat, and labouring with disease,
To your lone springs how thankful did I turn!
And soon reviving health, recover’d ease,
Display’d the virtues of your modest urn;
Some timid village maid thus shuns the gaze,
Unconscious of the beauties she displays ! 

பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு
பல ஆண்டுகளாக ஊற்றில் ஓடும் வற்றாத நதிகளே!
வன காட்சிகளின் மத்தியில் ஓசையில் சலசலக்க,
எப்படி உன் மகிமையை எவ்விலக்கணமும் சொல்ல மறந்தது!
கற்காத இந்தியனும் உன் சக்தியை ஆதரிப்பவனே!
மாபெரும் மரங்களும் பச்சைப் பசேலென்ற கொடிகளும்,
நிழல் பதிவில்லா வனமும் நீல நெடில் மலைகளும்,
இந்தப் புனித பூமிக்கு மெருகு ஊட்டிக் கொண்டிருக்கும்
எந்தக் கவிஞனும் புனையாத அமுதக் கவிதை அது!
சூட்டின் மயக்கமா! நோயின் கொடுமையா!
தனிமை ஊற்றைத்தேடி ஓடிய நோயாளி,
வந்தான் தெளிவாக சுகமாகி,
ஊற்றின் விந்தையைப் பறைசாற்றி!
அழகிய கிராமத்துக் கன்னிகளும் தம் அழகை மறைக்க மறந்து
வெறிப் பார்வைகளில் ஒதுங்காமல் ஊற்றில் சங்கமம் ஆவதும் அழகு!


           













ஐரோப்பிய கவிஞர் டி.ஏ.அன்டர்சன் கன்னியா வெந்நீர் ஊற்றுகள் இருக்கும் இடத்திற்குச் சென்று, அங்குள்ள கிணறுகளில் உள்ள  வெந்நீரை அள்ளி எடுத்து, தன் உடலில் ஊற்றி, அதன் வெப்பத்தை அனுபவித்து, அந்த சுற்றாடலில் இருந்த மரங்கள், மலைகள், காடு கள், மலையில் இருந்து வரும் அருவி ஆகியவற்றைப் பார்த்து ரசி த்து, வெந்நீர் ஊற்றில் நீராடும் மக்கள், அழகிய மங்கைகள், நோயா ளிகள் ஆகியோரைப் பார்த்து, அங்கு நீராடி விட்டுச் செல்லும் மக்க ளிடம் அவர்களின் அனுபவத்தையும் கேட்டறிந்து, அவ்விடத்திலேயே இருந்து, அவ்விபரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி பதினான்கு வரி களில் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

கவிஞர் டி.ஏ.அன்டர்சன் இந்நூலில் எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகள் மற்றும் பாடல்களில் இலங்கையில் உள்ள இரண்டு இட ங்களைப் பற்றி மட்டுமே பாடல் பாடியுள்ளார். அவற்றில் முதலாவது கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள். இரண்டாவது மகாவலி கங்கை. இது கன்னியா வெந்நீர் ஊற்றுகளுக்கு வெளிநாட்டவர்கள் கொடுக்கும் முக் கியத்துவத்தை இங்கே சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

இதன் மூலம் நம்மைப் போலவே அல்லது அதைவிட அதிகமாக ஐரோப்பியர் கன்னியா வெந்நீர் ஊற்றின் அருமை பெருமைகளை யும், மகிமையையும் அறிந்து வைத்துள்ளார்கள் என்பது தெளி வா கத் தெரி கிறது. ஐரோப்பிய அறிஞர்கள் கன்னியா வெந்நீர் ஊற்று களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், அவர்கள் மத்தியில் இவை பிரசித்தி பெற்று விளங்கியுள்ளமையும் இதன் மூலம் உறுதி யாகிறது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 


No comments:

Post a Comment