Monday, April 20, 2020

அக்கரைப்பற்றில் அழிந்த நிலையில் ஆலங்குளம் பிள்ளையார் கோயில்

அக்கரைப்பற்றில் அழிந்த நிலையில் ஆலங்குளம் பிள்ளையார் கோயில்


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/138   19 April  2020

அக்கரைப்பற்று நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் மேற்குப் பக்கத்தில் ஆலங்குளம் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் பண்டைய பெயர் ஆலடிக்கல் என்பதாகும். இங்கிருந்த ஆலமரத் தின் கீழ் ஒரு சிறிய பாறை அமைந்து இருந்தபடியால் இவ்விடம் ஆலடிக்கல் எனப் பெயர் பெற்றது.

இங்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். இவ்விடத்தின் அருகில் அவர்களின் நெற்காணிகள் இருந்த படியால் இங்கிருந்த ஆலமரத்தின் கீழ் ஓர் கல் பிள்ளையாரை ஸ்தா பித்து, பூஜித்து வழிபட்டு வந்தனர். இந்தப் பிள்ளையார் கோயில் ஓர் திறந்தவெளி மரக் கோயிலாக அமைந்திருந்தது.

































1871ஆம் ஆண்டு ஆலடிக்கல் எனப் பெயர் பெற்றிருந்த இந்த இடம் 1891 ஆம் ஆண்டு ஆலையடிக்கல் எனவும், 1901ஆம் ஆண்டு ஆலை யடிக் குளம் எனவும் திரிபடைந்து, தற்போது ஆலங்குளம் என அழை க்கப்படுகின்றது. 1891 ஆம் ஆண்டு இப்பகுதியில் 25 தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள் ளனர். 1901ஆம் ஆண்டு இங்கு 20 பேர் இருந்தமை பற்றி இலங்கை குடிசன மதிப்பீடு கூறுகின்றது.

கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்லோயா அபிவிருத்தி சபை உருவாக்கப்பட்டு இங்கினியாகல என்னுமிடத்தில் சேனநாய க்க சமுத்திரம் கட்டப்பட்டது. இது 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. அதன்பின்பு இங்கினியாகல முதல் அக்கரைப்பற்று வரை யான பகுதியில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டபோது இங்கு ரானை என்னுமிடத்தில் சீனித் தொழிற்சாலையும் கட்டப் பட்டது.

சேனநாயக்க சமுத்திரத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் அதன் வலது கரை கால்வாய் மூலம் பாதாகொடை குளம், அளஹேன குளம், மலையடிக் குளம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது. மேலும் இறக்காமம் குளம், இலுக்குச்சேனைக் குளம் ஆகியவற்றின் நீர் கால்வாய்கள் மூலம் அக்கரைப்பற்றின் வடக்கிலுள்ள வலது கரை நெற்காணிகளுக்கும் கிடைக்கும் வகையில் கால்வாய்கள் வெட்டப்பட்டன.



















இக்காலகட்டத்தில் அதாவது 1955ம் ஆண் டளவில் ஆலங்குளம் பகுதி யில் இருந்த காடு கள் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் குடியமர்த்தப் பட்டனர். இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் சைவப் பெரி யவர் இங்கு உயர் அதிகாரியாக்  கடமையாற்றினார். இவர் இங்கி ருந்த சைவ மக்களின் துணையுடன் ஆலமரத்தின் கீழ் திறந்த வெளி யில் அமைந்திருந்த பிள்ளை யாருக்கு ஒரு கோயிலை கட்டி பூஜை வழிபாடு கள் நடைபெற ஏற்பாடு செய்தார்.

அதன்பின்பு இக் கோயில் இப்பகுதி யிலிருந்த சைவ மக்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வழிபடப்பட்டது. அதே சமயம் ஆலங்குளத் தில் அருகில் இருந்த அட்டாளச்சேனை பகுதி மக்களும் இப்பகுதி யில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் காலத்துக்காலம் இங்கிரு ந்த இரு இனங்களுக்கும் இடையில் ஏற்பட்ட சில கசப்புணர்வு சண் டையாக மாறி, ஒரு கட்டத்தில் ஆலங்குளத்தில் இருந்த சைவ மக்கள் பலர் இக்கிராமத்தை விட்டு வெளியேறினர். அதன்பின்பு இங்கு முஸ்லிம் மக்களே பெரும் பான்மையாக வாழ்ந்து வந்தனர்.


















இந்நிலையில் இங்கி ருந்த பிள்ளையார் ஆலயமும் கைவிடப் பட்டு அழிவுற்றது. தற்போது கருவறை மீது ஆலமரத்தின் விழுதுகள் வளர் ந்து, ஆலய கட்டி டமும் இடிந்து, சிதைந்து காணப் படுகின்றது.  
சுமார் 150 வருட பாரம்பரியமிக்க இந்தப் பிள்ளையார் ஆலயம் இன்று பொலி விழந்து, சிதைந்து காணப்படுகிறது. 

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பாண்டிருப்பு, காரைதீவு, அக்க ரைப்பற்று, திருக்கோயில், தம்பிலுவில் ஆகிய இடங்களில் பெரிய கோயில்கள் பல காணப்படுகின்றன. இந்தக் கோயில் நிர்வாகிகள் மனது வைத்தால் ஆலங்குளத்தில் அழிந்து கிடக்கும் எமது பாரம் பரிய அடையாளச் சின்னமான பிள்ளையார் கோயிலை மீண்டும் புதுப்பொலிவு பெறச் செய்யலாம். 

ஒரு காலத்தில் சீரும் சிறப்புடன் விளங்கிய இவ்வாலயம் மீண்டும் கட்டியெழுப்பப் படுமா?....இதற்கான பதில் அம்பாறை மாவட்ட இந்துக் கோயில்கள், மற்றும் இந்து அமைப்புக்கள் கையில் தான் உள்ளது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்.
இலங்கை

No comments:

Post a Comment