Tuesday, April 21, 2020

நாத்திக வாதிகளால் சிதைக்கப்பட்ட அழகன் முருகனின் வடிவம்

நாத்திக வாதிகளால்  சிதைக்கப்பட்ட அழகன் முருகனின் வடிவம்


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/139    19 April 2020

    நாம் வணங்கும் கடவுள் முருகனும், நாத்திகவாதிகள் உருவாக்கிய போலி முப்பாட்டன் வடிவமும்

நாம் வணங்கும் முருகன் அழகன். இப்போது நாத்திகவாதிகள் உருவாக்கியிருப்பது அவலட்சணமான முப்பாட்டன் முருகன்.

முருகனுக்கு அழகிய கிரீடம்தான் இருக்கிறது. தலைப்பாகை இருந்ததில்லை.

சிவந்த நிறமுள்ள மேனி இருக்கிறது. கருத்த நிறமுள்ள உடல் அல்ல.

நேரான பார்வை இருக்கிறது. சாகப்போவது போல மேலே பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் பயபக்தியுடன் கோயில் கருவறை யில் வைத்து வணங்கி வரும் அழகன் முருகனை முப்பாட்டன் என்ற பெயரில் அவலட்சணப் படுத்துவதற்கு இந்த நாத்திகவாதிகள் யார்?

இவர்களுக்கு கடவுளை வணங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் இவர்களின்  முப்பாட்டனுக்கு புதிய பெயரை வைத்து வணங்கி விட்டு போகட்டும். அதைப் பற்றி யாரும் கேட்க மாட்டார்கள்.ஆனால் எமது சைவக் கடவுள்களின் உருவங்களை சிதைக்க கூடாது.

சிவனை காமக் கொடூரன் எனவும், உமாதேவியை பாண்டச்சிரிக்கி எனவும் வசை பாடிய இந்த நாத்திகவாதியை சைவப் பெருமக்கள் இன்னும் விட்டு வைத்திருப்பது கேவலத்திலும் கேவலம்.

இப்படித்தான் 50 வருடங்களுக்கு முன்பு சைவப்புலவர் திருவள்ளுவ ரின் உருவத்தை சிதைத்தார்கள்.அவரிடம் இருந்த விபூதி, சந்தனம், உருத்தி ராட்சம், பூணூல், சின் முத்திரை ஆகியற்றை அழித்து புதிய வள்ளுவரை உருவாக்கி, கடைசியில் வள்ளுவர் எல்லா மதத்திற்கும் பொதுவானவர் என சிலரும், வள்ளுவர் கிறிஸ்தவர் என சிலரும் கூறினர்.

சைவமக்கள் இப்படியே சும்மா பார்த்துக் கொண்டிருந்தால் இன் னும் சில வருடங்களில் முருகன் மதச்சார்பற்ற கடவுள் என்றும், இன் னும் ஒரு படி மேலே போய் முருகன் கிறிஸ்தவ புனிதர்களில் ஒருவர் எனவும் கூறுவார்கள்.

சைவமும் தமிழும் எமது இரு கண்கள் என்று சொல்லும் சைவப்பெரு மக்களே, இதையெல்லாம் இன்னும் எத்தனை காலம்  பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?

 என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment