Friday, April 17, 2020

கவனிப்பாரின்றிக் கிடக்கும் தமிழ் மன்னன் எல்லாளனின் சமாதி.


கவனிப்பாரின்றிக் கிடக்கும் தமிழ் மன்னன் எல்லாளனின் சமாதி


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/110     19 Sep 2017




இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை 44 வருடங்கள் ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளன்.

எல்லாளனின்  சமாதி அனுராதபுரத்தில் இன்றும் காணப்படுகிறது. இது தக்கிண தூபி என அழைக்கப் படுகிறது.











எல்லாளன் போரில் இறந்த பின்பு துட்டகாமினி இந்த சமாதியைக் கட்டினான். நீதி தவறாமல் ஆட்சி செய்த எல்லாளனுக்காக இவ்வழியில் போகும் அனைவரும் இந்த எல்லாளனின் சமாதிக்கு மரியாதை செலுத்தி விட்டு செல்ல வேண்டும் என துட்டகாமினி கட்டளை இட்டான்.
அனுராதபுரத்தில் உள்ள தூபிகளில் புனரமைக்கப்படாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஒரே தூபி இந்த தக்கிண தூபியாகும்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

No comments:

Post a Comment