புதையுண்டு போன புராதன இந்துக் கோயில்கள்-
நூல் அறிமுகம்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/123 4 Nov 2019
"புதையுண்டு போன புராதன இந்துக் கோயில்கள்" எனும் இந் நூல் நான் எழுதிய 7 வது நூலாகும். சில வருடங்களுக்கு முன்பு இலங் கையின் புராதன இந்துக் கோயில்கள்
பற்றிய ஆய்வுகளை நான் மேற்கொண் டிருந்த சமயம் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்
அவர்கள் எழுதிய “ஈழத்து இந்து
சமய வரலாறு” எனும் நூலை
வாசித்தேன். அந்நூலிலே புராதன இலங்கை யின் முதலா வது வழிபாடு யக்ஷ வழி பாடு எனக்
குறிப்பிட்டிருந்தார். அதற்கு அடுத்த படியாக நாக வழிபா டும், சிவ வழிபாடும்
சிறப்புடன் விளங்கியமை பற்றியும் பேராசிரி யர் குறிப் பிட்டிருந்தார். யக்ஷ
வழிபாட்டின் விபரங்கள் மற்றும் கோயில்கள் பற்றியும் அந்நூலில்
குறிப்பிடப்பட்டிருந்தது. பண்டைய அனுராதபுர நகரில் பண்டுகாபய மன்னனால் வழிபடப்பட்ட
சில யக்ஷ தெய்வங்கள் பற்றியும், இந்து தெய்வ வழிபாட்டிற்கு முன்னோ டியாக யக்ஷ
தெய்வங்கள் விளங்கி யதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்பு யக்ஷ தெய்வங்கள்
பற்றி ஆராய வேண்டும் எனும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.
இதற்காக அனுராதபுரத்திற்கு சென்று ஆய்வுகளை
மேற் கொண் டேன். அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம் மற்றும் அபயகிரி விகாரை வளாகம்
ஆகிய பகுதிகளில் யக்ஷ, யக்ஷி தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டேன். அவை
மட்டுமல்லாது பலவித வடிவங்களில் நாகராஜரின் சிற்பங்களையும் ஜேதவனா ராம, அபயகிரி
ஆகிய விகாரை வளாகங்களில் காணக் கிடைத்தது. இதனால் ஆய்வு செய்யும் ஆர்வம் அதிகரிக்க
அடுத்த டுத்து பல தடவைகள் அனுராதபுரத்திற்கு சென்று பண்டைய நகரில் இருந்த எல்லா
இடங்களிலும் ஆய்வு களை மேற்கொண்டேன்.
இக்கால கட்டத்தில் 100 வருடங்களுக்கு முன்பு
எச்.சி.பி.பெல் எனும் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் எழுதி யிருந்த ஆய்வுக் குறிப்புகளைத்
தேடி இலங்கை தொல் பொருள் திணைக்களத்திற்கு சென்று அவை பற்றிய விபர ங்களையும்
குறிப்பெடுத்தேன். அதில் அனுராத புரத் தின் வடக்கில் இருந்த சில கோயில்களைப்
பற்றியும் அவர் குறிப் பிட்டிருந்தார்.
மீண்டும் மூன்றாவது தடவையாக அனுராதபுரத்தி ற்கு
சென்றேன். அனுராதபுரம் பெளத்த யாத்திரீகர்களாலும், சுற்றுலாப் பயணிகளா லும்
எப்பொழுதும் நிரம்பி வழியும் ஓர் சுற்றுலாத்தலம். அன்றும் அப் படித்தான். கூட்டம்
களை கட்டியது. இந்தத்தடவை பெல் அவர்கள் குறிப்பிட்டிருந்த கோயில்களைத் தேடி
அபயகிரி விகாரையின் வடக் குப் பக்கம் உள்ள பங்குளிய, பெருமியன் குளம், அசோகாராம,
விஜே ராம ஆகிய இடங்களுக்குச் சென்றேன். அங்கெ ல்லாம் பெல் குறிப் பிட்ட கோயில் களைக்
காண முடியவில்லை.
அப்போதுதான் இவ்விடங்களுக்கு நடுவில் இருந்த
ஓர் காட்டுப்பகுதி என் கவனத்தை ஈர்த்தது. அக்காட்டுக் குள் சென்று பார்க்க
வேண் டும் எனும் ஆவல் ஏற்பட்டது. அப்பகுதியில் தற்செயலாக சந்தித்த இரு சிங்கள தம்பிமாரின் உதவியுடன் காட்டுப் பகுதிக்குள் நுழைந் தேன். சுற்றுலாப் பயணிகள் யாரும்
செல்லாத இடம். பட்டப் பகலில் கூட ஆள் நடமாட்டம் இல்லாத இடம். பறவை களும், காட்டு
வண்டுக ளும் கத்தும் ஓசை மட்டுமே காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. சூரிய
வெளிச்சமே படாமல் சற்று இருட்டாக அக்காட்டுப்பகுதி காணப் பட்டது. காட்டுக்குள் நடந்து சென்று
கொண்டிருந்த போது காலில் ஏதோ தடுக்கி விழப் பார்த்தேன். என் காலில் தடுக்கியது
என்னவென்று பார்த்தபோது தான் தெரிந்தது, அது
சிற்பங்கள் செது க்கப்பட்ட ஓர்
நாகக் கல் என்று. முக்கால்வாசி மண்ணுள் புதையு ண்டு அக்கல் காணப் பட்டது. ஆர்வம்
மேலிட அப்பகுதியில் இருந்த பற்றைகளையும், காய்ந்த சருகுகளையும் விலக்கிப் பார்த்த போது
ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தேன். அவ்விட த்திலே காட்டுப் பற்றைகளுள் மறைந்தும்,
மண்ணுள் புதையுண்டும் ஏராளமான கோயில்களின் இடிபாடுகளும், கற்தூண்களின்
துண்டங்களும், செங்கல் அத்தி வாரங்களும், கட்டிடங்களின் சிதைவுகளும் காணப் பட்டன
அதுதான் எச்.சி.பி.பெல் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் இந்துக் கோயில்களின் வளாகம்
என்பதைப் புரிந்து கொண்டேன்.
என்னோடு வந்த தம்பிமார் இருவரும் இதுதான்
தமிழர்கள் அழித்த பெளத்த விகாரைகளின் சிதைவுகள் எனக் கூறினர். அந்த சிறுவர் களுக்கு
இப்படித்தான் உண்மைக்குப் புறம்பாக ஓர் பொய்யைக் கூறி வைத்துள்ளார்கள் என்பது
புரிந்தது. இது போன்று பாதையின் அடுத்த பக்கத்தில் உள்ள காட்டிலும், விஜேராம
விகாரைக்கு செல் லும் வீதியின் மேற்குப் பக்கத்தில் உள்ள காட்டிலும் அழிக்கப் பட்ட
விகாரைகளின் சிதைவுகள் இருப்பதாகக் அவர்கள் கூறினர். சிறுவர் களின் உதவியோடு
பாதையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள காட்டிற் கும் சென்று பார்த்தேன். அங்கும்
கோயில்களின் சிதைவுகளைக் கண்டேன். பின்பு தம்பிமார் இருவரையும் அனுப்பிவிட்டு
விஜேராம காட்டுப் பகுதிக்குச் சென்றேன். அங்கும் சிதைவுகள் காணப்பட்டன. சுமார் 600
மீற்றர் அகலமும், 1500 மீற்றர் நீளமும் கொண்ட அந்தக் காட் டுப்பகுதி முழுவதும்
கோயில்களின் சிதைவுகள் பரந்து காணப் பட்டன.
மொத்தமாக இக்காட்டுப் பகுதியில் சுமார்
20 கட்டிடங்களின் இடி பாடுகள் காணப்பட்டன. வரலாற்று ஆய்வாளர் எச்.சி.பி. பெல்
அவர் களின் ஆய்வுக் குறிப்புகளில் இவ ற்றை “Tamil Ruins” (தமிழர் இடிபாடு கள்)
என அவர் குறிப்பிட்டுள்ளார். அக்குறிப்புகளில் பெல் குறிப்பிட் டுள்ள அத்தனை
இடங்களும் இங்கே துல்லியமாகக் காணப் பட் டமை ஆச்சரியத்தை உண்டாக்கியது. 1000
வருடங்க ளுக்கு முன்பு ஓர் சைவ சாம்ராஜ்யம் செழிப்புடன் விளங் கிய இடம் இன்று
மனிதர் கள் உற்புகக்கூட முடியாத அள விற்கு அடர்ந்த காடு மண்டிப்போய் கிடக்கிறது.
மந்திர முழக்கமும், மணி ஓசையும் இடை விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த ஓர் இடம் இன்று
மயான அமைதியுடன் உறங்கிக் கொண்டிருந்தது.
அதன்பின்பு அனுராதபுரத்தை முழுமையாக ஆராய்ந்து
முடித்த பின் சுமார் 40 இந்துக் கோயில்கள் மண்ணுள் புதையுண்டு கிடப்பதை அறிய
முடிந்தது. இத்தனை பெருந்தொகையான கோயில்கள் ஒரே நகரத்தில் இருக்கு மானால், இதே
பண்டைய காலத்தில் செழிப்புடன் விள ங்கிய அனுராதபுரம் மாவட்டத்தில் எத்தனை
கோயில்கள் இருந் திருக்கும் எனும் எண்ணத்தோடு அம்மாவட்டத்தில் இருந்த கோயில் கள்
பற்றிய பட்டியலைத் தயாரித்தபோது சுமார் 200 இந்துக் கோயில் களின் பெயர்கள்
கிடைத்தன. பட்டியலில் உள்ளபடி அக்கோயில்கள் இருந்த இடங்க ளுக்குச் சென்று அவற்றைத்
தேடிப் பார்த்தபோது சில கோயில்கள் பெளத்த ஆலயங்களுடன் இணைக்கப்பட்டு “தேவாலய”எனும் பெயரில்
பெளத்த மக்களால் வழிபடப் பட்டு
வருகின்றமை தெரிந்தது. ஆனால் பல கோயில்கள் மண்ணிற்குள் புதைந்து கிடப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
வருகின்றமை தெரிந்தது. ஆனால் பல கோயில்கள் மண்ணிற்குள் புதைந்து கிடப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
அந்த
சமயத்தில் தான் “புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில் கள்” எனும் தலைப்பு உதயமாகியது. அன்று
முதல் அதுவரை ஆய்வு செய்து முடித்த, அழிந்து போய் மண்ணுள் புதையுண்டு போன
கோயில்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை தினக்குரல் பத்திரிகை யில் 2010 ஆம் ஆண்டு
தொடர்ந்து 20 வாரங்கள் எழுதினேன். தொடர் ந்து ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டபோது அனுரா
தபுர மாவட்டத்தில் அழிந்தநிலையில் அதிகமான கோயில் கள் புதையுண்டு கிடப்பதை
அறிந்தேன். இதுவரை நான் ஆய்வுசெய்து முடித்த அழிந்துபோன கோயில்களின் விபரங்களை
இந்தத் தலைப்பில் ஓர் ஆய்வு நூலாக எழுதி வெளியிட முடிவு செய்தேன். அதன்படி
அனுராதபுர மாவட்ட த்தில் ஒரு காலத்தில் செழிப்புடன் பூஜிக்கப் பட்டு, பின்பு
காலத்தால் அழிந்து மறைந்து போய்விட்ட, மேலும் மக்களில்லாத நிலையில் பராமரிப்பின்றி
சிதைந்து போய்விட்ட, மற்றும் ஐரோப்பியரின் ஆக் கிரமிப்பின் போது அழிக்கப்பட்டு
மண்ணுள் புதையுண்டு இடிபாடு களாய்க் காணப்பட்ட 108 கோயில்கள் பற்றிய வரலாற் றுத் தகவல் களுடன் சுமார் 7 வருட
ஆய்வு முயற்சியின் பின் இந்நூலை வெளியி டுகிறேன்.
இன்று அனுராதபுரத்திற்கு செல்லும்
இந்துக்கள் கூட சுற்றுலா பய ணிகள் போல் அங்கிருக்கும் பெளத்த விகாரைகளுக்குச்
சென்று சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடுகின்றனர். அங்கு சிதைவுகளாக 40
இந்துக் கோயில் கள் இருப்பது பற்றி பலருக்குத் தெரியாது. தெரிந்த ஒரு சிலரும்
அவற்றைக் கண்டு கொள்வதில்லை. அனுராதபுர நகரில் உள்ள பெளத்த வழிபாட்டிடங்கள்
அனைத்தும் கலாசார முக்கோ ணத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப் பட்டு பெளத்த மக்கள்
வழிபடும் வகையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் சைவமக்களின் மூதாதையர்களால் வழி படப்பட்ட
இந்துக் கோயில்கள் எதுவும் புனரமைக்கப் படாமல் தேடுவாரற்று காடுகளு க்குள் மறைந்து
போய்க் கிடக்கின்றன. இதன் மூலம் புராதன அனு ராதபுர இராச்சி யத்தில் சைவசமயம்
இருக்கவில்லை எனும் தோற் றப் பாட்டை எதிர்கால பெளத்த, இந்து சந்ததியினர் எண் ணும்
நிலை உருவாகியுள்ளது.அனுராதபுர யுகத்தின் 1000 வருட தொன்மைமிக்க சைவசமய
கலாசாரத்தின் சான்று களும், தடயங்களும் மக்களின் பார்வையிலிருந்து மறை க்கப்பட்டுள்ளன.
அதேசமயம் இங்கிருந்து எடுக்கப்பட்ட அழகிய இந்து தெய்வச் சிலைகள் இலங்கையின் நூதன சாலைகளையும்,
தொல்பொருள் காட்சிச்சாலைகளையும் அலங்கரித்து, அழகு படுத்திக் கொண்டிருப்பதோடு, உல்
லாசப் பிர யாணிகளைக் கவரும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கிடைக்கப்பெற்ற பண்டைய திருவு ருவச்
சிலைக ளில் அழகும், அம்சமும் மிக்கவை இந்து தெய்வச் சிலைகளே என் பது அனைவரும் அறிந்த
உண் மையாகும். இவற்றிற்கு உலக அள விலே பெரும் மதிப்பு நிலவுகிறது, எனவே தான்
இன்றும் இலங்கை யிலும், இந்தி யாவிலும் ஆங்காங்கே காலத்துக்குக் காலம் கிடைக் கப் பெறும்
இந்து தெய்வச்சிலைகள் பெருந்தொகைக்கு பேரம் பேசி விற்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு
கடத்தப் படுகின் றன. வெளிநாடு களில் உள்ள தொல்பொருள் காட்சிச் சாலைகளில் இந்து
தெய்வச் சிலைகள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பியர் காலத்தில் இலங்கை யிலிருந்து
கொண்டு செல்லப்பட்ட தெய்வச் சிலைகள் பல ஐரோப்பிய நாடுகளிலுள்ள தொல்பொருள் காட்சிச்
சாலைகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. எனவே இத் தனை பெரு மதிப்புமிக்க இந்து
தெய்வச்சிலைகள் வைத்து வழிபடப்பட்ட கோயி ல்களின் சிதைவுகளும், அடையாள ங்களும் ஏன்
மக்களின் பார்வை யிலிருந்து மறைக்கப்பட வேண்டும்?
இலங்கையின் இந்து சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள்,
அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்த விட யத்தைக் கவனத்தில் எடுத்து,
அனுராதபுரத்தில் காடுகளுக் குள் மறைந்து காணப்படும் பண்டைய இந்துக் கோயில் கள் இருக்கும் இடத்தில்
உள்ள காட் டைத் துப்பரவு செய்து,மக்களின் பார்வைக்கு விட வழிசெய்ய வேண்டும்.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
இலங்கை
No comments:
Post a Comment