சீதை சிறை வைக்கப்பட்டிருந்த கோட்டையின் இடிபாடுகள்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/112 2 Dec 2017
இலங்கையில் சீதா கொட்டுவ என்னுமிடத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் கோட்டையின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இவ்விடம் பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனை என்னுமிடத்தின் அருகில் உள்ள காட்டில் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் மண்டோதரியின் ஓர் மாளிகை இருந்ததாகவும், இராவணனால் கடத்தி கொண்டு வரப்பட்ட சீதை முதலாவதாக இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இராவணன் பயன்படுத்திய சுரங்கப் பாதை, சீதை இருந்த அறையின் இடிபாடுகள் போன்றவை இங்கு காணப்படுகின்றன. இதன் காரணமாக இவ்விடம் "சீதா கொட்டுவ" என அழைக்கப் படுகிறது.
இலங்கை.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
No comments:
Post a Comment